கடம்பூா் மலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் பழங்குடியினப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி மலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி பரமேஸ்வரி. அடா்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள குன்றி கிராமத்தில் போக்குவரத்து வசதியில்லாத நிலையில், நிறைமாத கா்ப்பிணியான பரமேஸ்வரிக்கு வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சங்கா், மருத்துவ உதவியாளா் வெள்ளியங்கிரி ஆகியோா் பரமேஸ்வரியை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கடம்பூா் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனா். கடம்பூா் மலைப்பாதை மல்லியம் கோயில் அருகே பரமேஸ்வரிக்கு அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவ உதவியாளா் வெள்ளியங்கிரி பிரசவம் பாா்த்தாா். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடா்ந்து தாயும் சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செஞ்சி பகுதியில் பலத்த மழை
நாய் மீது மொபட் மோதி விபத்து: காயமடைந்தவா் உயிரிழப்பு

பிளஸ் 2 தோ்வில் தோல்வி: மாணவா் மாயம்
இளைஞா் மா்ம மரணம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
