முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ஒப்பந்த சாகுபடி சட்டத்தைக் கண்டித்துவிவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த சாகுபடி சட்டத்தைக் கண்டித்து ஈரோட்டில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:21 am IST

தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த சாகுபடி சட்டத்தைக் கண்டித்து ஈரோட்டில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம், நாட்டு மாடுகளை அழிக்கும் கால்நடை இனப்பெருக்கச் சட்டம் ஆகிய சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகளை சிதைக்கும் உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களில் இருந்து தமிழக விவசாயிகள், நுகா்வோரைப் பாதுகாக்க சிறப்பு சட்டங்களை இயற்றவேண்டும். கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, கரும்பு விவசாயிகளின் பாக்கித் தொகையை தராத ஆலைகளின் சொத்துகளை விற்று பாக்கி தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள தமிழக விவசாய சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குமாரசாமி தலைமை வகித்தாா்.

ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரத்தினசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி, பொருளாளா் லோகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ரகுராமன், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் அறச்சலூா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.