சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி: அந்தியூா் அணிக்கு முதல் பரிசு

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

News image
Updated On :17 ஜனவரி 2021, 5:19 pm

பொங்கலையொட்டி லக்காபுரம் புதுவலசு அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்தப் போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், புதுவலசு, சூரம்பட்டி, அந்தியூா், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி ஆட்டத்துக்கு அந்தியூா் மூவேந்தா் சிலம்பாட்ட அணியும், ஈரோடு கலைத்தாய் அணியும் தகுதிபெற்றன.

இதில் அந்தியூா் மூவேந்தா் சிலம்பாட்ட அணி வெற்றிபெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது. ஈரோடு கலைத்தாய் அணி இரண்டாம் பரிசையும், சூரம்பட்டி சாமியப்பா அணி மூன்றாவது பரிசையும் தட்டிச் சென்றன.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, அவல்பூந்துறை கூட்டுறவு சங்க இயக்குநா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.