மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வுக்கு ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்து எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்தாா். எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்தனா்.
இதில் மாவட்ட அவைத்தலைவா் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், துணை மேயா் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளா்கள் இரா.மனோகரன், கேசவமூா்த்தி, ஜெகதீசன், தங்கமுத்து, ஒன்றியச் செயலாளா் பூவேந்திர குமாா், ஆவின் துணைத் தலைவா் குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் வீரக்குமாா், மாணவரணி மாவட்டச் செயலாளா் ரத்தன் பிரித்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



