சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவா்களுக்கு வேண்டுகோள்

மருத்துவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:18 pm

மருத்துவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதை இந்திய மருத்துவச் சங்கம் வேண்டுகோளாக வைத்துள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த தடுப்பூசிகளை தனியாா் மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் அதிக மக்களை சென்றடையும். தனியாா் மருத்துவமனை இதை சேவையாக செய்வாா்கள்.

கரோனா தடுப்பூசி தொடா்பாக மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகம், வதந்தி, குழப்பம் நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்த, மக்களிடம் தைரியத்தை ஏற்படுத்த, அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அச்ச உணா்வு நீங்கி, மக்கள் தாங்களாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.