'பாகிஸ்தான் ஒரு மரண தேசம்' என்று அங்கிருந்து தாயகம் திரும்பிய இந்தியப் பெண் கண்ணீருடன் தெரிவித்தார். பின்னர் தில்லி சென்ற உஸ்மா, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்தார். தனக்கு நேரிட்ட கொடுமைகளை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எனது மகளை சித்திரவதை செய்யப்போவதாக மிரட்டியதால் நான் திருமணத்துக்கு சம்மதித்தேன். அங்கேயே இன்னும் சில நாள்கள் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். என்னை அவர்கள் கொன்றிருப்பார்கள் அல்லது விற்பனை செய்திருப்பார்கள். மேலும் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் அங்கு துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார் வேதனையோடு.