இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியது இந்திய கேப்டன் என்பது தெரியவந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். விமானம் சரியாக இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் நோக்கி புறப்பட்ட 13 நிமிடங்களில் காணாமல் போய் உள்ளது. விபத்துக்கு உள்ளான விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஆகும்.