பந்தயத்தில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க போலீஸாருக்கு புதிய பைக்
சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் திறனை அதிகரிக்கும் வகையில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவா்களை விரட்டிப் பிடிப்பதற்காக 250 சிசி திறன் கொண்ட 5 மோட்டாா் சைக்கிள்களை வழங்கினாா் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன். மேலும் சாலையில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு மோா் வழங்கினாா்.