சர்தார் வல்லபபாய் படேலின் 148வது பிறந்த நாள் - புகைப்படங்கள்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் 148வது பிறந்த நாள் கொண்டாட்டம் கெவாடியாயில் அமைந்துள்ள 182 மீட்டர் உயர சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
குஜராத் மாநிலம் கெவாடியாயில் அமைந்துள்ள 182 மீட்டர் உயர சர்தார் வல்லபபாய் படேலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வணக்கம் செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள படேல் சவுக்கில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படும் படேலின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள அவரது நினைவிடத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி காந்திநகரில் உள்ள விதான் சபாவில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள படேல் சவுக்கில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளான தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அஞ்சலி செலுத்தினார்.
தில்லியில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் நிறுவனத்தில் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர்.