இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அணியை 87 வயதான மூதாட்டி சாருலதா பட்டேல் உற்சாகமூட்டினார். போட்டிக்கு பிறகு கோலியும், ரோகித் சர்மாவும் மூதாட்டி சாருலதா பட்டேல் சந்தித்து ஆசி பெற்றனர். இப்படியொரு உற்சாகமான, உணர்வுப்பூர்வமான ரசிகரை நான் கண்டதில்லை. வயது என்பது வெறும் எண் தான், உற்சாகத்துக்கு அது தடையல்ல. அவரின் ஆசியுடன் அடுத்தகட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.