அறுபது வயதில் இருபது வயது இளமையை பெற உதவும் அற்புத சத்துமாவு

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்
அறுபது வயதில் இருபது வயது இளமையை பெற உதவும் அற்புத சத்துமாவு


சஞ்சீவினி சத்துமாவு

தேவையான பொருட்கள்

பூசணி விதை - 50 கிராம்
சாலாமிசிரி - 50 கிராம் 
சாரப்பருப்பு - 50 கிராம் 
முந்திரி பருப்பு -.50 கிராம் 
பாதாம் பருப்பு -.50 கிராம் 
பிஸ்தா பருப்பு -.50 கிராம் 
அக்ரூட் பருப்பு -.50 கிராம் 
வெள்ளரி விதை - 50 கிராம்
கருப்பு உளுந்து - 50 கிராம் 
எள்ளு - 50 கிராம்
பார்லி - 50 கிராம்
ஜவ்வரிசி - 50 கிராம் கொண்டைக்கடலை - 1/4 கிலோ

செய்முறை

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து சூடான பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் கலந்து குடித்து வரவும்.

பலன்கள் : அறுபதில் இருபது வயதில் இளமையைப் பெறலாம். ஆண்மைக் கோளாறுகள்,  நரம்புத் தளர்ச்சி,  துரித ஸ்கலிதம் போன்ற குறைபாடுகள் நீங்கும் .உடல் பலவீனம் ,  மெலிந்த உடல் போன்றவர்களுக்கு இது அமிர்த சஞ்சீவினி ஆக செயல்படும்

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com