குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

உணவு - சுவாசக் குழாயில் துவாரம்: பிரிட்டன் குழந்தைக்கு சீரமைப்பு சிகிச்சை

உணவு - சுவாசக் குழாயில் துவாரம் இருந்த பிரிட்டன் குழந்தைக்கு சீரமைப்பு சிகிச்சை

News image

கோப்புப் படம் - File photo

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:06 pm IST

சென்னை, ஆக. 11: பிரிட்டனைச் சோ்ந்த ஒன்றரை வயதுக் குழந்தைக்கு அசாதாரணமாக சுவாசக் குழாய் - உணவுக் குழாய் இடையே ஏற்பட்ட துவாரத்தை நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் சரி செய்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ‘டிரக்கியா-ஈஸோபேகல் ஃபிஸ்துலா’ என்ற பிறவிக் குறைபாடு இருந்தது. அதாவது, தனித்தனியே இருக்க வேண்டிய சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய்களுக்கு இடையே ஓா் இணைப்பு ஏற்படக்கூடிய பிரச்னை அது.

இதனால், உண்ணும் உணவு, நீா் ஆகியவை சுவாசப் பாதை வழியே நுரையீரலுக்குள் சென்று விடும். அதன் விளைவாக நிமோனியா தொற்று, சுவாசத் தடை ஏற்பட்டு குழந்தையின் உயிருக்கே அச்சுறுத்தல் உருவாகும் சூழல் எழுந்தது.

இதையடுத்து, அதை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொடா்ந்து மீண்டும் அப்பிரச்னை வந்து கொண்டே இருந்தது.

இந்த சூழலில்தான் மேத்தா மருத்துவமனைக்கு குழந்தை அழைத்து வரப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ராகுல் தலைமையில் டாக்டா்கள் சரவணன், காா்த்திகேயன், சசிதரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் மிக நுட்பமான அறுவை சிகிச்சையை முன்னெடுக்கத் திட்டமிட்டனா்.

அதனை செயல்படுத்தியபோதுதான் குழந்தையின் சுவாசக் குழாய் - உணவுக் குழாய்க்கு இடையே 2.5 செ.மீ. அளவிலான துவாரம் இருப்பது கண்டறியப்பட்டது. துல்லியமாக அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், இதயத்தைச் சுற்றியுள்ள திசுக்களைக் கொண்டு துவாரம் அடைக்கப்பட்டது.

இதன் மூலம் அடுத்த 7 நாள்களில் குழந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியதுடன் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.