தண்டுக் கீரையுடன் வெந்தயம், சீரகம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூல நோய்கள் குணமாகும்.
தண்டுக்கீரையுடன் சிறுபருப்பு, பூண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் தீரும்.
சிவப்பு நிற தண்டுக் கீரைக்கு விசேஷ குணம் உண்டு.இந்தக் கீரைத் தண்டுடன், துத்தி இலையைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வெட்டைச் சூடு, வெள்ளைப்படுதல் குணமாகும்.
தண்டுக் கீரையுடன் மிளகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
தண்டுக் கீரையுடன் உளுந்து, மஞ்சள் இரண்டையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் நரம்புக்கோளாறுகள் சரியாகும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல மருத்துவ ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609