92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ருசி மிகுந்த நிலக்கடலை சட்னி ரெசிபி இதோ!

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் நிலக் கடலைபருப்பு,

News image
Updated On :28 ஜூலை 2018, 12:04 pm

எஸ். சரோஜா

தேவையான பெருள்கள்

நிலக்கடலை பருப்பு ( வறுத்தது) - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - கால் கிண்ணம்
தக்காளி - 3
வெங்காயம் - 2
மிளகாய் வற்றல் - 3
வெள்ளைப் பூண்டு - 8 பற்கள்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
உளுந்தம் பருப்பு, கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் நிலக் கடலைபருப்பு, தேங்காய்த்துருவல், மிளகாய் வற்றல், வெள்ளைப் பூண்டு சேர்த்து மிக்ஸியிலிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, பின்னர் அரைத்த விழுதையிட்டு, உப்பும் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்து கமகம வாசனை வந்ததும் இறக்கவும். நிலக்கடலை சட்னி தயார். இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் இவைகளுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். நிலக்கடலையில் புரதம், தாதுப் பொருள்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.