பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ருசி மிகுந்த நிலக்கடலை சட்னி ரெசிபி இதோ!

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் நிலக் கடலைபருப்பு,

News image
Updated On :28 ஜூலை 2018, 5:34 pm IST

தேவையான பெருள்கள்

நிலக்கடலை பருப்பு ( வறுத்தது) - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - கால் கிண்ணம்
தக்காளி - 3
வெங்காயம் - 2
மிளகாய் வற்றல் - 3
வெள்ளைப் பூண்டு - 8 பற்கள்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
உளுந்தம் பருப்பு, கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் நிலக் கடலைபருப்பு, தேங்காய்த்துருவல், மிளகாய் வற்றல், வெள்ளைப் பூண்டு சேர்த்து மிக்ஸியிலிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, பின்னர் அரைத்த விழுதையிட்டு, உப்பும் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்து கமகம வாசனை வந்ததும் இறக்கவும். நிலக்கடலை சட்னி தயார். இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் இவைகளுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். நிலக்கடலையில் புரதம், தாதுப் பொருள்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.