குடற் புண் , தொண்டைப் புண் , ஆசணப் புண் குணமாக உலர்ந்த பிரண்ட இலையை (100கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு(10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி தினமும் காலையில் 2 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் குடற் புண் , தொண்டைப் புண் , ஆசனப் புண் போன்ற அனைத்தும் குணமாகும்.
மூட்டு வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி நீங்க பிரண்டை இலை , முடக்கத்தான் இலை ,சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டூ வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.
மாதவிலக்குப் பிரச்சனை தீர பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்சனைகள் சரியாகும்.
இளைத்த உடல் பெருக்க பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி ,நெய்யில் வதக்கி ,மிளகு ,உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
இதயம் சார்ந்த பிரச்சனை தீர பிரண்டைத் தண்டுடன் , வாதநாராயணன் இலை ,பூண்டு ,மிளகு ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
பித்த மயக்கம் , உடல் எரிச்சல் நீங்க பிரண்டை இலையுடன் இஞ்சி ,பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம் , உடல் எரிச்சல் போன்றவை விலகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com