சுண்டல் சுவையும் அதிகளவு புரதச் சத்தும் மிகுந்த ஒரு ஆரோக்கிய உணவு. இந்த பண்டிகை சீஸனில் விதவிதமான சுண்டல்களைத் தயார் செய்து அசத்த இதோ சில குறிப்புக்கள்.
சுண்டலுக்கான கொண்டைக் கடலையை ஊற வைத்த பின்பு வெயிலில் ஒரு மணி நேரம் வைத்துவிட்டு பிறகு வேக வைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும்.
சுண்டலுக்கு தேங்காய்த் துருவலை சற்று வறுத்துப் போட்டால் கெடாது. கொப்பரைத் துருவலையும் போடலாம். இட்லி மிளகாய்ப் பொடி தூவினாலும் சுவையாக இருக்கும்.
சுண்டலில் கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்தால் நிறம் அழகாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
சுண்டலுக்கு கடலையை ஊற வைக்கும்போது சிறிது சமையல் சோடாவை சேர்த்து கழுவி விட்டு வேறுநீரில் ஊற வைத்தால் விரைவில் வெந்துவிடும்.
கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சுண்டல் செய்ய முன்பே ஊற வைக்க வேண்டாம்.
அவலை வறுத்துப் பொடித்து சர்க்கரைப் பொடி ஏலக்காய்ப் பொடி கலந்து நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகள் பிடித்து நவராத்திரி தேவிகளுக்கு நைவேத்யம் செய்யலாம்.
கடலைப் பருப்பை ஊற வைத்து சுண்டல் செய்து கீழே இறக்கும்போது சர்க்கரையை தூவி கலந்து இறக்கினால் ஜோராக இருக்கும்.

முழு கடலையை சுண்டல் செய்யும் போது மேலே மசால் பொடியைத் தூவி கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.
பச்சைப் பயறை வேக வைத்து வெல்லப் பாகு வைத்து அதில் கலந்து இனிப்புச் சுண்டலும் செய்யலாம். காரச் சுண்டல் செய்தால் பெருங்காயம் தூவி செய்தால் வாய்வு வராது.

வேர்க்கடலையைச் சுண்டல் செய்யும்போது மாங்காயையும், காரட்டையும் துருவி சேர்த்து குடமிளகாய் துருவி கலந்தால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
எல்லாச் சுண்டலுக்குமே பொடி உப்பு தூவி கலந்தால் ஒன்று போல உப்பு சேர்ந்திருக்கும்.
பாசிப்பருப்பு சுண்டலில் வெல்லத்தை தட்டி மேலே தூவினால் நன்றாக இருக்கும்.
- ஆர். ஜெயலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

பெண் குழந்தைகளை காப்போம் - கற்பிப்போம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


