பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு கீரைக் கடைசல்

முதலில் பசலைக் கீரையைச் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போடவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:11 pm IST

பசலைக் கீரைக் கடைசல்

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை - 2 கட்டு 
சிறுபருப்பு - 100 கிராம்
தக்காளி - இரண்டு
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
சீரகத் தூள் - அரை ஸ்பூன்
மிளகுத் தூள் - 10 கிராம்
மஞ்சள், உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு

செய்முறை

முதலில் பசலைக் கீரையைச் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் சிறுபருப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து வேக வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து  வதக்கிய பின்பு அதனுடன் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து வேக வைத்த கீரையுடன்  வதக்கியவற்றையும் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து  பின்பு இறக்கி  நன்கு கடைந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பயன்கள்
 
வளரும் குழந்தைகளுக்கு இந்தக் கீரைக் கடைசல் சத்தான உணவு மட்டுமல்ல அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். மேலும் குடற்புண் நோயாளிகளுக்கு  இந்தக் கீரைக் கடைசல்  மிகவும் உகந்தது.

குறிப்பு : இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.