நாவூறும் சுவையில் ஒரு தர்பூசணி அல்வா!

தர்ப்பூசணியில் சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு கூழாக அரைத்து எடுக்கவும்.
நாவூறும் சுவையில் ஒரு தர்பூசணி அல்வா!
Published on
Updated on
1 min read

தேவையானவை:


தர்பூசணிப் பழம்(சிறியது) - 1
வெல்லம் - அரை கிலோ
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
நெய் - 50 கிராம், முந்திரி - 10
ஏலக்காய்த் தூள் - சிறிய அளவு


செய்முறை:

தர்ப்பூசணியில் சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு கூழாக அரைத்து எடுக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து போதிய அளவு தண்ணீரில் இட்டு கரைத்து வடிகட்டவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சவும்.

பாதிபதம் வந்ததும், தர்ப்பூசணிக் கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து வேக விடவும்.

இடையிடையே நெய் ஊற்றி, நன்கு கிளறி கொடுக்கவும்.

கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும்.

நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி பரவலாக வைக்கவும், ஆறியதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும்.

தர்ப்பூசணி அல்வா தயார். சுவையும், சத்தும் மிக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com