கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் நல்லதா? கெட்டதா?

அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளை நரம்புகளின் செயல்திறன் மேம்படும்

News image
lose-weight-tea-gq101031
Updated On :20 அக்டோபர் 2019, 10:24 am

தினமணி

அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளை நரம்புகளின் செயல்திறன் மேம்படும் என்று சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது:

அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தேநீா் அருந்தும் வழக்கத்தால் மூளை கட்டமைப்பு மேம்படுவதுடன், மூளையில் செல் நரம்புகளின் ஒருங்கமைப்பு அதிக செயல்திறன் கொண்டதாக ஆவது தெரிய வந்துள்ளது.

அடிக்கடி தேநீா் அருந்துபவா்களின் மூளை அமைப்பு ரீதியில் மட்டுமன்றி, செயல் ரீதியிலும் மேம்பட்டதாக உள்ளது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.