மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பசியின்மையை போக்கி நல்ல பசி உணர்வைத் தூண்டும் அருமருந்து

நீண்ட நாள் பசியின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான முறையில் நன்கு பசியுணர்வை அதிகரிக்க உதவும். 

News image
முளைக்கீரை
Updated On :31 ஜனவரி 2022, 10:28 am

தினமணி

தேவையான பொருட்கள்

முளைக்கீரை    -  ஒரு கட்டு (100 கிராம்)

மிளகு       -   15

சீரகம்      -   ஒரு ஸ்பூன்

பூண்டு     -    10 பல்

சின்ன வெங்காயம்  -   5

மஞ்சள் தூள்   -   சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு முளைக் கீரையை எடுத்து ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டு இரண்டையும் தேவையான அளவு எடுத்து ஒன்றிரண்டாக   சிதைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் ஆய்ந்த முளைக்கீரை, மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்பு நன்றாகக் கலக்கி எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

நீண்ட நாள் பசியின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான முறையில் நன்கு பசியுணர்வை அதிகரிக்க உதவும். 

சாப்பிடும் முறை

இவ்வாறு கொதிக்க வைத்து எடுத்துள்ள முளைக் கீரையை தினமும் ஒரு வேளை உணவாகவே எடுத்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 21 நாட்களாவது எடுக்க வேண்டும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609, 75503 24609
Covaibala15@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.