தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது 3 மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளின் கருணை மனுக்களை பரிசீலிக்கக் கூடாது. தூக்கு தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் பட்சத்தில், அதற்கான காரணத்தை குடியரசுத் தலைவர் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 72, தூக்கு தண்டனைக் கைதியின் தண்டனையைக் குறைக்க அல்லது ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் நபர், இறந்தாலோ அல்லது சுய நினைவற்ற நிலையை எட்டினாலோ, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டுக்கு பரிந்துரையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் வயதைக் குறைக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அது தொடர்பாக பரிந்துரையில் எதுவும் கூறப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுராவில் கவிழ்ந்த படகு மீட்பு: மாயமான சுற்றுலாப் பயணிகளின் நிலை?
பாக். சென்ற ஈரான் குழு! கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு விமானத்தில் அஞ்சலி!

இணையத்தில் லீக்கான ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம்..! சிக்கலில் இயக்குநர் அமீர்!

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்! சுவாரசியம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

