கர்நாடகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனல் பறக்கும் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குப் பதிவுக்கு இன்னும் 14 நாள்கள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில், அவரவர் கட்சி வேட்பாளர்களை
ஆதரித்து அரசியல்
கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிரப் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
அத்வானி பிரசாரம்: கர்நாடகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஹூப்ளி, ரானேபென்னூர், தாவணகெரேயிலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பெங்களூரிலும், ராஜ்நாத் சிங் சிக்கோடியிலும், தேசிய பொதுச்செயலர் வெங்கைய்ய நாயுடு ராய்ச்சூர், கங்காவதி, சிந்தனூரிலும் பிரசாரம் செய்தனர்.
பிரதமர், சோனியா, ராகுல் சுற்றுப்பயணம்: இதனிடையே, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









