அமெரிக்க கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்களை கேட்டறிய இந்தியா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறை தீவிரமாக கண்காணித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியது.
உலகம் முழுவதும் இணையதளம் மூலம் பரிமாற்றப்பட்டு வரும் தகவல்களை கண்காணிக்க அமெரிக்கா ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என இந்தியா ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இணையதளம் மூலம் பெறப்படும் தகவல்களை பரிமாறிக் கொள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா கண்காணிப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை உரிய அமைப்பின் மூலம் கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளோம்.
இந்நடவடிக்கையால் இந்திய தனிநபர் உரிமை தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா எனக் கேட்டபோது அவர் கூறியதாவது:
தனிநபர் உரிமைகள் மீறப்படுவதை இந்தியா ஏற்காது. ஒவ்வொரு நாளும் புது புது பிரச்னைகள் எழுகின்றன. தற்போதே இதுதொடர்பாக எந்த முடிவுக்கும் வரமுடியாது. உரிய விவரங்கள் கிடைத்தபின் தான் தேவையான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றார் அக்பருதீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் அமைதி ஒப்பந்தம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்குமா?

ஆர்எஸ்எஸ் பற்றி ஒரு தலித் நபருக்கு ஏன் கவலை? பிரியங்க் கார்கே குறித்து பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு!

நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர்: முன்னாள் இந்திய கேப்டன்

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


