மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாவோயிஸ்டு தாக்குதலில் காயமடைந்த வி.சி. சுக்லா மரணம்

கடந்த மாதம் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், சத்தீஸ்கர் மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.சி. சுக்லா செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 84.

News image
Updated On :11 ஜூன் 2013, 8:00 pm

கடந்த மாதம் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், சத்தீஸ்கர் மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.சி. சுக்லா செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 84.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

"மூன்று குண்டுகள் பாய்ந்ததன் காரணமாக, சுக்லாவின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவர் உயிரிழந்தார்' என்று குர்கானில் சுக்லா அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையின் தலைவர் யதின் மெஹதா கூறினார்.

கடந்த 25-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் கட்சிக் கூட்டத்தை முடித்து கொண்டு திரும்பிய காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேரந்த 28 பேர் உயிரிழந்தனர், சுக்லா பலத்த காயமடைந்தார். ராய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவரது உடம்பில் இருந்த குண்டுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் 26-ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.

விடுதலைப் போராட்ட தியாகி ரவி சங்கர் சுக்லாவின் மகனான வி.சி. சுக்லா, 1957-ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார். ஒன்பது முறை மக்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1975ஆம் ஆண்டில் நெருக்கடி நிலையின்போது மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அரசில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகவும், மத்திய நீர் வளத் துறை அமைச்சராகவும் சுக்லா பதவி வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.