நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றும் சுரங்கப் பணிகளைத் தொடங்காத என்டிபிசி, செயில் உள்ளிட்ட 12 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தது. இதற்கான உரிமங்களைப் பெற்ற பிறகும் பல நிறுவனங்கள் இன்னும் சுரங்கப் பணிகளைத் தொடங்கவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜே.எஸ்.பி.எல்., ஜி.வி.கே. பவர் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
அதைத் தொடர்ந்து, சுரங்கப் பணிகளைத் தொடங்காத என்.டி.பி.சி., செயில் உள்ளிட்ட மேலும் 12 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. உரிய விளக்கம் தராத பட்சத்தில் சுரங்க ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது: குஷ்பு

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: வழக்கு முடித்துவைப்பு
ஈரோடு கிழக்கு: தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரஸ்: ‘கை’ப்பற்றும் முனைப்பில் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

