வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்கு உதவும் வகையில் சோனியா இவ்வாறு கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
காங்கிரஸ் தகவல்தொடர்பு பிரிவு தலைவர் அஜய் மக்கான் இது தொடர்பாகக் கூறியுள்ளது: கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்தை உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டுமென்று சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் சார்பில் டேராடூனில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் கபூர், காங்கிரஸ் சேவா தள தலைவர் மகேந்திர ஜோஷி ஆகியோர் அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலத்துக்கு உடனடியாக நிவாரணப் பொருள்களை வழங்கி உதவ வேண்டுமென்று அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அஜய் மக்கான் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


