அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தின் போது ரூபாயின் மதிப்பு ரூ.64.45 ஆக சரிந்தது.
இறக்குமதியாளர்களுக்கும், வங்கிகளுக்கும் டாலரின் தேவை அதிகரித்ததே ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்ததற்கு முக்கியக் காரணம். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் பங்கு விலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 340 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,905 புள்ளிகளில் நிலைகொண்டது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும்.
ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை 63.45 ஆக இருந்தது. புதன்கிழமை அன்னியச் செலாவணி வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ரூபாய் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பிற்பகல் 2.45 மணியளவில் ரூ.64.45 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது. ரூபாயின் மதிப்பில் கடுமையான ஏற்ற இறக்கம் இருப்பதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டது. எனினும் அவை எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லை.
பவுண்டுக்கு நிகரான மதிப்பு ரூ.101.3: பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை சந்தித்தது. பவுண்ட்டுக்கு
நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.101.3 என்ற
சரிவை புதன்கிழமை எதிர்கொண்டது. முன்னதாக
செவ்வாய்க்கிழமை, பவுண்டுக்கு நிகரான ரூபாயின்
மதிப்பு ரூ.100.52 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



