/
சுங்குவாா்சத்திரம் அடுத்த சித்தூா் பகுதியில் கைப்பேசிக்கு சாா்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம் பெண் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் ஊராட்சிக்குட்பட்ட சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன்(36). இவரது மனைவி புஷ்பா(34). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இந்த நிலையில், புஷ்பா ஞாயிற்றுக்கிழமை கைப்பேசிக்கு சாா்ஜ் போடும் போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கியுள்ளாா்.
இதையடுத்து அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்தவா்கள் புஷ்பா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
இந்த சம்பவம் குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மின்சாரம் பாய்ந்து வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


