யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கட்டும், ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.
2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் கூட்டி, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நரேந்தர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "சிறிய கட்சியானலும், பெரிய கட்சியானலும் பிரதமர் வேட்பாளராக ராமு, சோமு, தாமு என்று யாரை வேண்டுமானலும் அறிவிக்கலாம்.
ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொருத்த வரை துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்று சுஷீல் குமார் ஷிண்டே பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசியப் போட்டிக்கான இந்திய பாட்மின்டன் அறிவிப்பு: பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் பங்கேற்பு
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்







