வரவிருக்கும் மக்களவைத் தேர்தல், "தலைமைக்கான வாக்கெடுப்பாக' இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தலைமை பிரச்னையால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.
திருவனந்தபுரத்தில் அரவிந்தர் கலாசார கழகம் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், "நாட்டில் நடப்பு அரசியல் சூழல்' என்ற தலைப்பில் பேசிய அவர், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், "முதன்மை எதிர்க்கட்சி பாஜக தனது நிரூபிக்கப்பட்ட தலைமையை, ஆளுமையை முன்நிறுத்தும்போது அத் தேர்தல் ஏறக்குறைய பிரதமரை நேரடியாக தேர்வு செய்வதாகவே அமைந்துவிடும்' என்று கூறினார்.
"ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாஜக ஆளுமைகொண்ட தலைமையை நம்பியிருக்கும்போது, காங்கிரஸ் கட்சி வாரிசு தலைமையை நம்பி நிற்கிறது. பிரதமர் என்பவர் முடிவுகள் எடுப்பவராக இருக்க வேண்டும். அது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம். ஆனால் தற்போது பிரதமர் மன்மோகன் சிங் கார்ப்பரேட் நிறுவன முறையில் ஆட்சி நடத்துகிறார். முடிவுகள் அரசுக்கு வெளியே எடுக்கப்படுகின்றன. அவற்றை செயல்படுத்தும் அதிகாரியாக பிரதமர் இருக்கிறார். இத்தகைய "கார்ப்பரேட் மாடல்' மூலம் மக்களாட்சியை நடத்த முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


