முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சண்டீகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, சண்டீகர் பாஜக தலைவர் சஞ்சய் தாண்டன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
ரயில்வே வாரிய பதவியை பெற்றுத் தருவதற்காக ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டதாக முன்னாள் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், தனக்கு வாக்களித்த பொதுமக்களின் நம்பிக்கையை பன்சால் இழந்துவிட்டார். எனவே, சண்டீகர் மக்களவை உறுப்பினர் பதவியையும் பன்சால் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.
இதற்கிடையே, பாஜகவின் முன்னாள் படைவீரர் பிரிவு மற்றும் மருத்துவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் சண்டீகரில் பன்சாலுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளி கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்வு: தங்கம்?
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
