மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பொதுமக்களை பாதிக்கும் போராட்டம்: முடிவுக்கு கொண்டு வர கேரள அரசு முடிவு

கேரள மாநிலத்தின் முழுஅடைப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சட்டம் இயற்றுவது என ஆளும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2015, 1:09 pm

கேரள மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் அடிக்கடி விடுக்கும் கதவடைப்பு, முழுஅடைப்பு போராட்டம் உள்ளிட்டவைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சட்டம் இயற்றுவது என ஆளும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

வரும் 30 ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தின் போது இதற்கான சட்டம் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.

அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் போராட்டங்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி வணிக நிறுவனங்கள், கடைககள், கல்வி நிறுவனங்களை கட்டாயமாக மூட வலியுறுத்துவோர், வாகனங்களின் இயக்கத்தை தடுப்போர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்படுவதோடு, அவர்கள் மீது அபராதமும் விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.