/

பாகிஸ்தான் மருத்துவமனை அருகே மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் காயம்

பாகிஸ்தான் குவெட்டா நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Updated On :11 ஆகஸ்ட் 2016, 5:50 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் குவெட்டா நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பலூசிஸ்தான் அல்-கையர் மருத்துவமனை அருகே வாகனம் ஒன்றின் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் உள்பட 4 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். போலீஸார், செய்தியாளர்களும் இந்த குண்டு வெடிப்பில் பலியாகினர். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.