வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கருப்புப் பணத்தை மாற்றுவோர் தப்பிக்க முடியாது: சக்திகாந்த தாஸின் கடுமையான எச்சரிக்கை

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவோரும், அதற்கு உதவி செய்பவர்களும் தப்பிக்க முடியாது என்று பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 டிசம்பர் 2016, 8:36 am


புது தில்லி: கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவோரும், அதற்கு உதவி செய்பவர்களும் தப்பிக்க முடியாது என்று பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் பக்கத்தில் சக்திகாந்த தாஸ் பதிவு செய்திருப்பதாவது, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவோரும், அதற்கு ஒத்துழைப்போரும் நிச்சயம் தப்பிக்க முடியாது.

விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விசாரணை அமைப்புகளின் ஒருங்கிணைப்பும் சேர்ந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் தற்போதே தெரிய வந்துள்ளது. எதிர்காலத்தில் இதனால் ஏற்பட்ட முன்னேற்றம் நன்கு தெரியும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இவரது கூற்றுப்படி, பெங்களூரில் நேற்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

நவம்பர் 23ம் தேதி ரூ.3.5 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் தில்லியில் கைப்பற்றப்பட்டது. இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் அதிரடியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.