மும்பை தாக்குதல் முயற்சி 2 முறை தோல்வி அடைந்தது: டேவிட் ஹேட்லி வாக்குமூலம்

மும்பை தாக்குதல் முயற்சி 2 முறை தோல்வி அடைந்ததாகவும், 3வது முறைதான் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் குறித்து தீவிரவாதி டேவிட் ஹேட்லி கூறியுள்ளார்.
Updated on
1 min read

மும்பை தாக்குதல் முயற்சி 2 முறை தோல்வி அடைந்ததாகவும், 3வது முறைதான் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் குறித்து தீவிரவாதி டேவிட் ஹேட்லி கூறியுள்ளார்.

2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் குறித்து மும்பை நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக அமெரிக்காவில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ஹேட்லி அளித்த வாக்குமூலத்தில் மும்பையில் தாக்குதல் நடத்த 2 முறை முயற்சி செய்தோம். 2008ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடத்த முயன்ற தாக்குதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

ஆனால், 3வது முறையே திட்டமிட்டபடி நவம்பர் மாதம் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு திட்டமிட, 7 முறை இந்தியாவுக்கு வந்து உளவு பார்த்ததாகவும் ஹேட்லி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com