இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் நபர் கைது

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் பாட்டி. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவர் நேற்று குஜராத் மாநிலத்தின் இந்திய -பாகிஸ்தான் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்றார்.

அவர் பிடித்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள், ரப்பார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து சில வெளிநாட்டு பணமும்,ஒரு தீப்பெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ரியாஸிடம் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com