புது தில்லி : மேற்குவங்க மாநிலம் சாந்தினிகேதனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீதான ஊழல் புகாரினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.
இன்று காலை துணை வேந்தரின் அலுவலகம் உட்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
முன்னாள் துணை வேந்தர் தனது பதவிக் காலத்தில், பல்கலை மானியக் குழுவின் விதிகளைப் பின்பற்றி பணி நியமனங்கள் நடைபெறவில்லை என்று ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.