அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்தியாவில் நடைபெறும் புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாடு: பாகிஸ்தான் பங்கேற்பு!

உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் தில்லியின் நோய்டாவில் நடைபெற்று வரும் புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2016, 10:10 am

DIN

புதுதில்லி: உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் தில்லியின் நோய்டாவில் நடைபெற்று வரும் புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை பரவல் தடுப்பு செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தின் சார்பில், தில்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  

இந்திய -பாகிஸ்தான் இடையே நிலவும் சூழல் காரணமாக இந்த மாநாட்டில் அண்டைநாடான பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் சார்பாக தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முதன்மை செயலாளர் போஸியா பயாஸ் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் (ஒருங்கிணைப்பு மற்றும் வரன்முறை) அமைச்சகத்தின் டைரக்டர் ஜெனரல் ஆசாத் ஹபீஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார் என்று செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.