எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் ஒருவர் பலி!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.


ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் இன்று காலை முதல் பாகிஸ்தான் ராணுவம் இந்திய படை நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் நவ்ஷேரா செக்டாரில் அத்துமீறிய தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய படைகள் சரியான பதிலடியை கொடுத்தது. முதலில் இப்பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்திற்கு எந்தஒரு அசம்பாவித சம்பவமும் நேரிடவில்லை என்று ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் என்றும் தொடர்ந்து அந்த பகுதியில் கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...