பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கான்பூர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு!

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயந்தது.   

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:58 am

DIN

கான்பூர்: உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயந்தது.   

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.  

அதன் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 149 ஆக உயந்தது.

இதனிடையே விபத்துக்குள்ளான தடம் சீரமைக்கப்பட்டு இன்று அங்கு ரயில் போக்குவரத்து துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.