நாடு முழுவதும் பதிவைப் புதுப்பிக்காத 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் (என்.ஜி.ஓ) அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
அந்தப் பட்டியலில் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களும், நூற்றுக்கணக்கான பள்ளிகளும், சில கல்வி நிறுவனங்களும், சாலையோரக் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் பிரபலமான சில தன்னார்வ அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
2010-ஆம் ஆண்டைய வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள், தங்களது பதிவை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், நாடு முழுவதும் 11,319 தன்னார்வ அமைப்புகள், தங்களது பதிவை கடந்த ஜூன் மாத இறுதிக்குள் புதுப்பிக்கவில்லை. அந்த அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசமும், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
எனவே, அந்த அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதேபோல், 3 ஆண்டுகளாக வரவு-செலவு கணக்கைத் தாக்கல் செய்யாத 10,000 தன்னார்வ அமைப்புகளின் பதிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அவற்றில், பெரும்பாலான அமைப்புகள் செயல்படாதவை அல்லது வெளிநாட்டு நன்கொடையைப் பெற விரும்பாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அவகாசம்: இதனிடையே, உரிய காலத்தில் விண்ணப்பிக்காததாலும் போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யாததாலும் 1,736 தன்னார்வ அமைப்புகளின் விண்ணப்பங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை.
அவற்றில், ராமகிருஷ்ணா மிஷன், மாதா அமிர்தானந்தமாயி அறக்கட்டளையின் சில கிளைகள், கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் போன்ற பிரபலமான அமைப்புகள், ஜூன் 30-க்கு முன்பாகவே இணையதளத்தில் விண்ணப்பித்தபோதிலும், அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. எனவே, போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு அந்த அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம், வரும் 9-ஆம் தேதி வரை மீண்டும் அவகாசம் அளித்துள்ளது. வெளிநாட்டு நன்கொடை தடுப்புச் சட்டத்தால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 42,500-ஆக இருந்த வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகளின் எண்ணிக்கை, தற்போது 20,500-ஆகக் குறைந்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற பிரியா காங்கஸ் - புகைப்படங்கள்

சர்ச்சைக்குரிய ஆன்மிகப் பேச்சாளரைக் கரம் பிடிக்கும் நடிகை மிருணாளினி!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 1 - நேரலை!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 4ஆவது தங்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


