மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவு குறித்து புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய வீரர் பணி நீக்கம்

எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்து விடியோ மூலமாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய வீரர் தேஜ் பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 9:50 am

DIN


புது தில்லி: எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்து விடியோ மூலமாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய வீரர் தேஜ் பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், போதுமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும் விடியோ மூலம் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விடியோ சமூக தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தவறான குற்றச்சாட்டுகளை கூறியதாக, தேஜ் பகதூர் யாதவ், எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் மீது ராணுவ ஊழியர்களுக்கான விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராவ் பகதூர் யாதவ் வெளியிட்ட விடியோவைத் தொடர்ந்து, இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையும், மத்திய உள்துறை அமைச்சகமும் விரிவான அறிக்கை அளிக்கும்படி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு சமைக்கப்படுவதையும், அவர்களுக்கு போதுமான அளவுக்கு வழங்கப்படுவதையும் உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்து உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கூறி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வந்த பல்வேறு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், பாராமிலிட்டிரிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.