கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கறுப்பு பணத்தை தாமாக முன்வந்து ஒப்படைக்க மே 10-ம் தேதி வரை காலக்கெடு

கருப்பு பணத்துக்கு வரி மற்றும் அபராதம் செலுத்தியிருந்தால், அப்பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய கால அவகாசத்தை மே மாதம் 10-ம்

News image
Updated On :22 ஏப்ரல் 2017, 5:41 am

DIN

புதுதில்லி: கருப்பு பணத்துக்கு வரி மற்றும் அபராதம் செலுத்தியிருந்தால், அப்பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய கால அவகாசத்தை மே மாதம் 10-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத வருமானத்தை வைத்திருப்போர் கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தி, நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 'பிரதம கரீப் கல்யாண் யோஜனா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய இத்திட்டம், மார்ச் 31-ஆம் தேதி முடிவடைந்தது. இத்திட்டத்தின்படி, வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தியவர்கள், வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மே 10-ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்னர் வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தியவர்கள் மற்றும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பு வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தவர்களுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.