ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாக்களித்ததை உறுதி செய்யும் 16 லட்சம் 'விவிபிஏடி' கருவிகள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

வாக்காளர்கள், வாக்களித்ததை உறுதி செய்யும் வசதி கொண்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட (விவிபிஏடி) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை

News image
Updated On :23 ஏப்ரல் 2017, 12:52 pm

DIN

புதுதில்லி: வாக்காளர்கள், வாக்களித்ததை உறுதி செய்யும் வசதி கொண்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட (விவிபிஏடி) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.

இதுதொடர்பாக, குடியரசுத் தலைவரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இப்பிரச்னையைத் தீர்க்க "விவிபிஏடி"  என்ற கருவிகளை வாங்க மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தது. மத்திய அமைச்சரவை கூடி, தேர்தல் ஆணையத்தின் இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து வந்தது.  

இதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (விவிபிஏடி) வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி, 16 லட்சத்துக்கும் மேற்பட்ட கருவிகளை வாங்க தேர்தல் ஆணையம் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த கருவி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். வாக்காளர், தனது வாக்கை பதிவு செய்தபின்னர், இந்தக் கருவியில் உள்ள திரையில் அவர் வாக்களித்த சின்னம் தெரியும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலுமாக நீங்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.