ஏழைகளுக்கான சமையல் எரிவாயு மானியம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்தார்.
சமையல் எரிவாயுக்கான மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறைக்கான அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் ரூ.143 கோடி மதிப்பீட்டிலான சமையல் எரிவாயு உற்பத்தி தொழிற்சாலைக்கு தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். அப்போது அங்குள்ள செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அகர்தலாவில் இந்த சமையல் எரிவாயு உற்பத்தி தொழிற்சாலை 2019-ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்பட்டுவிடும். அவ்வாறு அமையப்பெற்றால், சமையல் எரிவாயு விநியோகம் இப்போது இருப்பதைப் போல் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு, வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வங்கதேசத்தின் சிட்டகாங்கிலிருந்து திரிபுரா வரையில் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச அரசிடம் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு வங்கதேசம் ஒப்புதல் அளித்தவுடன், குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றார் தர்மேந்திர பிரதான்.
மானியம் தொடரும்: முன்னதாக, சமையல் எரிவாயுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தவுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் கூறுகையில், "ஏழைகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரும் சமையல் எரிவாயுக்கான மானியம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது. சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கான மானியங்கள் தொடரும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!

அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்..! ஒலிம்பிக்கில் சேர்க்கவும் திட்டம்!

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



