தமிழகத்தில் ஆளும் தவெக, குதிரைபேரத்தில் ஈடுபட்டது உண்மைதான் என அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலருடன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏ, தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாகக் கொடுத்த கடிதத்தை சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் கொடுத்தனர். அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணன், தவெகவுக்கு ஆதரவளித்த நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பினார். இதையடுத்து இன்று அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் இன்று சட்டப்பேரவைச் செயலரை நேரில் சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாகக் கடிதம் அளித்தனர்.
பின்னர் வெளியே வந்த ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, குதிரை பேரம் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, கீழ்தளத்தில் ராஜிநாமா, 10 நிமிடங்களில் மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு நடக்கிறது. சால்வைகள் போர்த்துகிறார்கள். உறுப்பினர் அட்டை வழங்குகிறார்கள் என்று சொன்னால் அதற்குப் பெயர் என்ன. இது குதிரை பேரம் நடக்காமல் வேறென்ன? என்று பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவை செயலருடன் ஓ.எஸ். மணியன் சந்திப்பு!

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு: ஓ.எஸ். மணியன்

தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை உறுதி: ஓ.எஸ். மணியன்

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



