குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று தில்லியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து கூறினேன். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்கக் கோரி அவரிடம் வலியுறுத்தினேன். மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது அரசின் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அண்மையில் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.