புதுதில்லி: நீட் தேர்வு பற்றி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளிப்பது ஏன்? என்றும் யாருடைய அமைச்சரவையை யார் கவனிக்கிறார்கள் என ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் குழந்தைகள் மரண சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டியது யார்?
குழந்தைகள் மரணத்துக்கு பொறுப்பேற்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொறுப்பானவர்கள் யாரும் இல்லையா?
நீட் தேர்வு விவகாரத்திற்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் வாக்குறுதி அளிக்கிறார். ஜிஎஸ்டி விலை மாற்றம் தொடர்பான கேள்விகளுக்கு மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவிக்கிறார்.
யாருடைய அமைச்சரவையை யார் கவனிக்கிறார்கள் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் ஒருநாள் கூட, தற்போதைய ஆட்சி நீடிக்கக் கூடாது என்றும் இன்னும் 650 நாட்களில் மத்தியில் புதிய அரசு அமைய இருக்கிறது. அந்த அரசு விவசாயிகள், பொதுமக்கள் நலன் உள்ள அரசாக அமைய வேண்டும் என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

பள்ளிகளிளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும்! சிவகாசி காங். வேட்பாளா் உறுதி

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


