அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கணவன் இடத்தில் காதலனைக் கொண்டு வர ஆசிட் ஊற்றி காதலன் முகத்தைச் சிதைத்த பெண்: உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்! 

கணவன் இடத்தில் தன் காதலன் முகத்தினை 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொண்டு வர எண்ணிய பெண் ஒருவர், காதலன் முகத்தினை ஆசிட் ஊற்றி சிதைத்த, உறைய வைக்கும் உண்மைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2017, 10:18 am

DIN

ஹைதராபாத்: கணவன் இடத்தில் தன் காதலன் முகத்தினை 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொண்டு வர எண்ணிய பெண் ஒருவர், காதலன் முகத்தினை ஆசிட் ஊற்றி சிதைத்த, உறைய வைக்கும் உண்மைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வாதி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக சுதாகர் ரெட்டி என்பவரோடு திருமணம் நிகந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ஸ்வாதிக்கு ராஜேஷ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது இருவருக்கும் இடையேயான தகாத உறவாக மாறியுள்ளது. இதன் விளைவாக இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ விரும்பினர்.அதற்குத் தடையாக இருக்கும் சுதாகர் ரெட்டியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அப்பொழுது ஸ்வாதி ஒரு திட்டம் தீட்டினார். 2014-ஆம் ஆண்டு வெளியான தெலுஙகுப் படம் 'எவடு'. அப்படத்தில் ஒரு நாயகனான அல்லு அர்ஜன் தன்னுடைய முகத்தினை 'பிளாஸ்டிக் சர்ஜரி' மூலம் உருமாற்றிக் கொண்டு,மற்றொரு நாயகனான ராம்சரண் போல் மாறுவார். அதே போல ராஜேஷின் முகத்தினை சுதாகர் ரெட்டியின் முகத்தினை ஒத்ததாக 'பிளாஸ்டிக் சர்ஜரி' மூலம் மாற்ற ஸ்வாதி  திட்டமிட்டார். 

தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 26.11.2017 அன்று இருவரும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த சுதாகர்  ரெட்டியினை தலையில் அடித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலை பதேபூர் மண்டல் பகுதியில் உள்ள மைசமா காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று எரித்தனர்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ராஜேஷின் முகத்தில் ஸ்வாதி ஆசிட்டினை ஊற்றி முகத்தினைச் சிதைத்துள்ளார். வீட்டாரிடம் ஹைதராபாத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சுதாகரின் முகத்தில் ஆசிட் வீசியதாக நம்பும்படி நாடகமாடி அவர்களை ஏமாற்றியுள்ளார். ஸ்வாதியின் பேச்சை நம்பிய அவர்களும், தனியார் மருத்துவமனை ஒன்றில் சுதாகராக இருக்கும் ராஜேஷினை சேர்த்து, அவருக்கு சிகிச்சையினைத் தொடங்கியிருக்கின்றனர்.

அவரது 'பிளாஸ்டிக் சர்ஜரி' ஆரம்ப கட்ட சிகிச்சைக்காக ருபாய் ஐந்து லட்சம் வரையிலும் அவர்கள் செலவும் செய்தனர். பின்னர் சிகிச்சை நடக்கத் துவங்கிய சமயத்தில், சுதாகரின் தாயாருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 'நாபர் மீது சந்தேகம் வந்துள்ளது. அவர் உடனடியாக போலீசிடம் புகார் செய்ய, ஸ்வாதி கைது செய்யப்பட்டார்.       

நாகர்குர்நூல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜோகு சென்னையா தலைமையில் நடந்த விசாரணையில் ஸ்வாதி தன்னுடைய குற்றத்தினை ஒத்துக் கொண்டார். 'எவடு' பட பாணியில் இதனைத் திட்டமிட்டதாகவும் அவர் கூறினார். அவரது உதவியுடன் மைசமா காட்டுப் பகுதியில் இருந்து, சுதாகரின் உடலின் எரிந்த மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜேஷ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.