அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஜிஎஸ்டி: பொருள்கள் மீது புதிய விலையை அச்சிடுவது எப்படி? மத்திய அரசு விளக்கம்

சரக்கு- சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) பிந்தைய விலையை பொருள்கள் மீது எவ்வாறு அச்சிட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:21 pm

DIN

சரக்கு- சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) பிந்தைய விலையை பொருள்கள் மீது எவ்வாறு அச்சிட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பு உற்பத்தி செய்த பொருள்கள் பல இப்போது புதிய வரி விதிப்பின்கீழ் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றில் சில பொருள்களின் விலை குறைந்துள்ளது. வேறு சில பொருள்கள் ஜிஎஸ்டி- க்குப் பிறகு அதிகரித்துள்ளன. எனவே, பொருள்கள் மீது விலையை எவ்வாறு மாற்றி அச்சிடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறை அவினாஷ் ஸ்ரீவத்ஸவா தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பொருள்களின் விலை கூடியிருந்தாலும், குறைந்திருந்தாலும் அவற்றை பொருள்களின் மீது அச்சிட வேண்டியது அவசியம். அதே நேரத்தில், ஏற்கெனவே அச்சிடப்பட்ட அதிகபட்ச விலையை மறைத்துவிட்டு அதற்கு மேல் புதிய விலை அச்சிடக் கூடாது. பழைய விலையை நுகர்வோர் தெரிந்து கொள்ளும் வகையில் அதற்கு அருகில் புதிய விலையை அச்சிட வேண்டும். செப்டம்பர் 30- ஆம் தேதி வரை மட்டும்தான் இவ்வாறு புதிய விலையை அச்சிட அனுமதி உண்டு.
ஜிஎஸ்டி- யால் விலை குறைந்த பொருள்கள் எவை என்பதையும், விலை அதிகரித்துள்ள பொருள்கள் எவை என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விலை குறைப்பின் பயன் நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது.
பொருள்களின் விலை கூடியிருந்தால் அது தொடர்பாக உற்பத்தியாளர், அல்லது இறக்குமதி செய்து விற்பனை செய்பவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.